ஆள் இல்லாத வீட்டில் ஆட்டையா போட்ட ஆலினால் அழகு ராணி இவர் தான்..!!
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஆள் இல்லாத நேரம் பார்த்து பக்கத்து வீட்டிற்கு கள்ளசாவியை போட்டு அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த நகையை திருடிய பெண் போலீசில் வசமாக சிக்கியுள்ளார்..
சென்னை புதுவண்ணாரப்பேட்டை புச்சம்மாள் தெருவை சேர்ந்த பூமாதேவி வயது 45 என்ற பெண் வசித்து வருகிறார்.., இவரின் பக்கத்து வீட்டில் தமிழரசி என்ற பெண் வசித்து வருகிறார்.. தமிழரசிக்கு சுப்புலட்சும் என்ற ஒரு மருமகள் இருக்கிறாள்..
சுப்புலட்சுமி மாமியார் தமிழரசியை பார்க்க வரும்பொழுது பூமாதேவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.., கடந்த 20ம் தேதி பூமாதேவி குழந்டைகுளுடன் சில நாட்கள் வெளியூர் பயணம் சென்று விட்டு வருகிறேன் வீட்டை கொஞ்சம் பார்த்துக்கொள்ளும்படி தமிழரசியிடமும் அவரின் மருமகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்..
இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்ட சுப்புலட்சுமி.., பூமாதேவி வீட்டில் கள்ளச்சாவி போட்டு திறந்துள்ளார்., பின் பீரோவை உடைக்காமல்.., பீரோ ரிப்பேர் செய்யும் நபரை அழைத்து வந்து பீரோவை திறக்க வைத்து.., 10 சவரன் நகையை கொள்ளையடிதுள்ளார்..
இரண்டு நாட்களுக்கு பிறகு சென்னை வந்த பூமாதேவி வீட்டிற்கு வந்து நகையில்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.. வீட்டின் கதவோ, பீரோவின் கதவோ உடைக்கபடாமல் எப்படி திருட்டு போனது என சந்தேகித்த பூமாதேவி போலீசில் புகார் அளித்துள்ளார்..
புகாரின் பெயரில் அங்கு வந்த போலீசார் நடத்தப்பட்ட விசாரணையில் கைரேகையை வைத்து சுப்புலட்சுமியை சந்தேகித்தனர்..
பின் போலிசார் நடத்திய விசாரணையில் சுப்புலட்சுமி செய்த குற்றங்களை ஒப்புகொண்டார்.., நகையை திருடிய குற்றத்திற்காக சுப்புலட்சுமி சிறையில் அடைக்கப்பட்டார்..