அண்மையில் வங்கி ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தியது. இதில் பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த ஊழியர் சங்கத்தினர், அனைத்து சனிக்கிழமைகளையும் வங்கி விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தற்போது வங்கி அலுவலகங்களில் மாதத்தில் இரண்டு சனிக்கிழமை வேலை நேரமாக இருந்து வந்தது. அதனைக் குறைக்கும் விதமாக வங்கி ஊழியர்கள் அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, ஊழியர்களின் கோரிக்கை குறித்து நிதியமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது. இந்த கோரிக்கைக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், இனி வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே, அதாவது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே செயல்படும். சனிக்கிழமைகள் விடுமுறை காரணமாக, மற்ற தினசரி 5 வேலை நாட்களில் கூடுதலாக 45 நிமிடங்கள் வங்கி செயல்பாடு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

















