அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச்செயலார் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிம்ஹவ் குமார் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிம்ஹவ் குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர்.
அதேபோல், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)