ஓடும் இரயில் முதியவர்களுக்கு நேர்ந்த கொடூரம்..!! காவலர்கள் அதிரடி வேட்கை..!!
ரயிலில் வயதான தம்பதியருக்கு தண்ணீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை மற்றும் பணம் கொள்ளை
ஓசூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த ராஜு (75) மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் (67)ஆகியோர் அவர்களுக்கு சொந்தமாக எர்ணாகுளம் பகுதியில் உள்ள இடத்தை பார்த்துவிட்டு எர்ணாகுளத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு விசாகப்பட்டினம் செல்லும் ரயிலில் வந்து கொண்டிருந்தனர்..
அப்போது ரயிலில் 40 வயது மதிப்பு மிக்க ஒருவர் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்துள்ளார் அதை குடித்தவுடன் அவர்கள் மயங்கி உள்ளனர்அவர்களிடமிருந்து ஐந்து சவரன் தங்க நகைகள் 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு செல்போன்கள் சூட்கேஸ் ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றுள்ளார்..
இவர்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்காததால் அவர்களை அழைத்துச் செல்ல வந்த மகன் உடனடியாக காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்அவர்கள் ரயிலில் மயங்கி நிலையில் வயது முதிர்ந்த தம்பதிகள் இருப்பதை கண்ட காட்பாடி ரயில்வே போலீசார் அவர்களை மீட்டு வேலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்…
அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இவர்கள் தற்போது மயக்கம் தெளிந்து கண் விழித்துள்ளனர்.. இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தண்ணீரில் மயக்க மருந்து கொடுத்து நகை , பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றவனை தேடி வருகின்றனர்.