குஜராத் பாடகிக்கு இசை நிகழ்ச்சியின் போது ரூ. 4.50 கோடி வரை பணமழை பொழிந்ததாக வீடியோ, புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தை சேர்ந்த பிரபல பாடகி கீதா பென் ரபாரி,27, இவர் எங்கு சென்று பாடினாலும் அவருக்கு பணமழை விழும். கடந்த இரு தினங்களுக்கு முன் கட்ச் மாவட்டத்தில் இவரது இசை நிகழ்ச்சி நடந்தது.
அப்போது இவரது பாடலை கேட்டு ரசித்த ரசிகர்கள் கரன்சிகளை மழையாக பொழிந்தனர். இதன் வீடியோ, புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நிகழ்ச்சிக்கு பின் கீதா ரபாரி கூறுகையில், இன்று நடந்த நிகழ்ச்சியில் ரூ. 4.50 கோடி கிடைத்தது. இவ்வளவு தொகை வழங்கி ரசிகர்களுக்கு நன்றி” என கூறி உள்ளார்.
₹45 #million currency notes showered on folk singer #GeetaRabari in #Gujarat, #India pic.twitter.com/6dbn2Vv0ah
— Backchod Indian (@IndianBackchod) April 13, 2023