வீட்டில் ஆட்கள் உள்ளபோதே கொள்ளை.. போதை ஆசாமிக்கு தர்ம அடி..!
திண்டுக்கல் மாவட்டம் பழனி புறநகர் பகுதியான திருநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் முனுசாமி என்பவர் தனது மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர்களிடம், அப்பகுதியை சேர்ந்த போதை ஆசாமி ஒருவர் முனுசாமி வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை திருட முயன்றுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முனுசாமியின் மனைவி கத்தி கூச்சலிட்டதை அடுத்து, அங்குவந்த அக்கம் பக்கத்தினர் திருட்டனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் இதுகுறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடமிருந்து அந்த நபரை மீட்டு கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அந்தநபர் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
பழனி நகர் பகுதியில் தொடரும் இது மாதிரியான குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வீட்டில் ஆட்கள் இருந்தபோது திருட்ட முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்