உரிமை பாதுகாக்கப்படும்..! அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ஐ.நாவின் கருத்து…!! சுனிதா கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ..!!
டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தநிலையில் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு மற்றும் பணமோசடி வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் 22ம் தேதி இரவு கைது செய்தனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜெர்மனி வெளியுறவுத்துறை, “நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் அனைத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கில் பயன்படுத்தப்படும் எனவும் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் மற்ற இந்தியக் குடிமக்களைப் போலவே ஆம் ஆத்மியின் தலைவரின் நியாயமான கருத்துக்களை முன்வைத்து விசாரணை நடைபெறும் என கூறியிருந்தார்.
அதற்குப் பதிலளித்திருந்த இந்திய வெளியுறவுத்துறை, ஜெர்மனின் கருத்துகள் இந்தியாவின் உள் விவகாரங்களில் அப்பட்டமான தலையீடு. எங்கள் நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவது, நீதித்துறையின் சுதந்திரத்தை குறை மதிப்பிற்கு உட்படுத்துவது போன்ற கருத்துகளையே நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கண்டனத்தை தெரிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரகம், அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்ட செய்திகளை அமெரிக்க அரசு கண்காணித்து வருகிறது. சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சரும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் இருக்கும் நியாங்களை இன்னும் சில நாட்களுக்குள் சமர்ப்பிக்கும் படி இந்திய அரசிற்கு நெருக்கடி கொடுத்தும் இதுவரை இந்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்த நிலையில், கெஜ்ரிவாலின் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் போன்ற இந்தியாவின் ஆளும் பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் குறித்து, ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.
அதில் பேசிய அவர், மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஐ.நா நம்புகிறது. இந்தியாவிலும், தேர்தல் நடைபெறும் அனைத்து நாட்களிலும், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும். சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் அனைவரும் வாக்களிக்க முடியும் ஒரு சிறந்த ஜனநாயகத்தை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து டெல்லி மாநில ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அமலாக்கத்துறையின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, அவர் மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை நீதிமன்றம் ஏப்ரல் 1ஆம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டது. முன்னதாக அமலாக்கத் துறை 250 முறை ரெய்டு நடத்தியும் ஒரு ரூபாயைக் கூட கைப்பற்றவில்லை என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா அகர்வால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பயணத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்த அவர், தன்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர் என தெரிவித்தார்.