ராயன் படம் குறித்து.. துர்கா பதிவு..! அட இது புதுசா இருக்கே..!!
சார்பட்ட பரம்பரை படத்தில் இடம்பெற்ற மாரியம்மா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் துஷாரா விஜயன். இவர், தனுஷின் ராயன் படத்தில் துர்கா என்ற கதாபாத்திரத்தில் தற்போது நடித்துள்ளார்.
இந்த படத்தில் இடம்பெற்ற இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே, ரசிகர்கள் அவருக்கு அளித்த வரவேற்பையொட்டி, துஷாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், திரு.தனுஷ் அவர்கள் இயக்கிய ராயன் திரைப்படத்திற்கு தாங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு பெரிய நன்றிகள். என் உழைப்பிற்கு கிடைத்த தங்களின் அன்பும், அரவணைக்கும் வார்த்தைகளும் என் மனதிற்கு நெருக்கமாகவே நிலைத்திருக்கும்.
படத்துவக்கம் முதல் தற்போது மாபெரும் வெற்றிப்படமாக ராயன் உருமாறியிருக்கும் வரையிலான பயணம் மிகப்பெரியது. வெகுசன மக்களிடம் என் கதாபாத்திரம் உட்பட ஏனைய கதாபாத்திரங்களையும் கொண்டு சேர்த்ததிலும் மாபெரும் வெற்றியை உறுதி செய்ததிலும் ஊடகத்தின் பங்கு முக்கியமானது.
அதற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். எங்கள் இயக்குநர் திரு.தனுஷ் அவர்களுக்கும், சன் பிக்சர்ஸ் குழுமத்திற்கும் பெரிய, பெரிய நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். துர்காவிற்கு கிடைத்த அங்கீகாரமும், அன்பும், வெற்றியும் மக்களால் சாத்தியமானது என்றால், அது மிகையில்லை.
தொடர்ந்து உங்கள் அனைவரையும் மகிழ்விக்க உழைத்துக் கொண்டே இருப்பேன். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் கருத்தில் கொண்டு என் பயணத்தை செழுமைப்படுத்துவேன்” என்று கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்