பழனி உண்டியலில் விழுந்த தங்க செயின் மீட்பு..!!
பழனி முருகன் கோவிலுக்கு சில மாதங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த சசிதரன் மற்றும் அவரின் மகள் சங்கீதா கோவிலுக்கு சென்றுள்ளனர்.
முருகனை தரிசனம் செய்து விட்டு, உண்டியலில் காணிக்கை செலுத்தும் பொழுது தவறுதலாக 2 சவரன் தங்க செயின் உண்டியலில் செலுத்தியுள்ளார். பின் சில நாட்களுக்கு பின் இதை உணர்ந்த அவர் பழனி முருகன் கோவில் அறங்காவலர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்.., தவறுதலாக செயின் கோவில் உண்டியலில் செலுத்தி விட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். உண்டியலில் செலுத்தப்பட்ட எந்த பொருளும் கோவிலுக்கு சொந்தம் எனும் சட்டம் உள்ளது.
ஆனால் காணிக்கை செலுத்திய பெண் ஏழை குடும்பத்து பெண் என்பதால்.., அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவை சோதனை செய்துள்ளனர், செயினை காணிக்கையாக செலுத்தியது தெரிந்தவுடன் கோவில் அறங்காவலர் “சந்திர மோகன்” தனது சொந்த செலவில் தங்க செயின் வாங்கி கொடுத்துள்ளார்.
இழந்த செயின் திரும்பி கிடைத்ததும் பக்தர் சங்கீதா மிகவும் மகிழ்ச்சியாக இதனை தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற பல உண்மைகதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ. லோகேஸ்வரி.