சென்னை பன்னாட்டு விமான நிலைய குடியுரிமை அதிகாரி சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவில் , இந்தியாவை சேர்ந்த அந்தோணிசாமி என்பவர் போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டு பெற்று மலேசியா நாட்டிற்கு செல்வதற்காக முயற்சி செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்திருந்தார்.
அதனடிப்படியில் மத்திய குற்றப்பிரிவு போலி பாஸ்போர்ட் சிட்டு மோசடி மற்றும் கந்துவட்டி புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு அந்தோணிசாமி என்பவரை கடந்த மாதம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், போலி பாஸ்போர்ட் வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டதன் பேரில், மத்திய குற்றப்பிரிவு, காவல் கூடுதல் ஆணையாளர் C.மகேஸ்வரி அறிவுரையின்பேரில், காவல் துணை ஆணையாளர் G.நாகஜோதி ஆலோசனையின் பேரில், போலி பாஸ்போர்ட் சீட்டு மோசடி மற்றும் கந்துவட்டி பிரிவு உதவி ஆணையாளர் M, சரஸ்வதி, மேற்பார்வையில் இப்பிரிவின் உதவி ஆய்வாளர் G.எமர்சன் வித்தாலிஸ் துலைமையிலான காவலர்கள் இவ்வழக்கில் போலி பாஸ்போர்ட் தயார் செய்யும் ஏஜெண்டுகளை பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு, முக்கிய குற்றவாளியான முகமது புரோஷ்கான் என்பவரை கடந்த 3ஆம் தேதி கைது செய்து விசாரணை செய்து வந்தனர்.
விசாரணையில் போலி ஆவணங்கள் மற்றும் போலி பாஸ்போர்ட்டுகள் தயார் செய்து அதன் மூலம் மலேசியா மற்றும் வெளிநாடுகளுக்கு தகுதியில்லாத நபர்களை பணம் பெற்று கொண்டு அனுப்பி வைத்ததும் அவருக்கு உடந்தையாக புதுக்கோட்டை, ஆலங்குடியைச் சேர்ந்த மற்றொரு போலி பாஸ்போர்ட் ஏஜென்ட் சையது அபுதாஹிர் என்பவர் தலைமறைவானதும் தெரியவந்தது.
அதன் பேரில், குற்றம்சாட்டப்பட்ட புரோஷ்கான் மற்றும் தலைமறைவான சையது அபதாஹிர் வீட்டிலிருந்து மொத்தம் சுமார் 105 பாலப்போர்ட்கள் மற்றும் போலி ஆவணங்கள், இந்திய அரசு மற்றும் வெளிநாட்டு ஆவணங்களில் பயன்படுத்துவதைப் போன்று போலியான அரசாங்க மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் முத்திரைகள், அதை தயாரிக்கும் உபகரணங்கள், Computer, Printer, Cash Counting Machine, Cash Rs.57,000/-, Singapore Dolar-1000, Thai Baht-15500, Malaysian Ringgit – 25 ஆகிய வழக்கு சொத்துகளை கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட புரோஜ்கான் விசாரணைக்குப் பின்னர் நீதிமனறத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். ஏஜெண்டுகள் மூலமாக பாஸ்போர்ட் மற்றும் விசா பெற விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக உஷாராக இருக்குமாறும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக முறையான ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் மற்றும் சம்பந்தபட்ட நாடுகளின் தூதரகங்களை அணுகி விசாக்களை பெறுமாறும் சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.