நடிகர் வடிவேலு தொடக்கத்தில் பல நடிகர்களுடன் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தார். செந்தில் கவுண்டமணி காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர், பல முன்னணி நடிகர்களோடு நண்பனாக நடித்து வந்த வடிவேலு பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார். இந்த நிலையில் , நடிகர் வடிவேலு நீயா நானா கோபிநாத்துக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் நடிகர் ராஜ்கிரணுக்கும் உங்களுக்குமான நட்பை பற்றி சொல்லுங்கள் என்று கோபிநாத் கேள்வி கேட்டார். இப்போது, நான் உண்மையை சொல்லியே ஆகணும் என்று பேசிய வடிவேலு, என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் முதலில் ராஜ்கிரணுடன் நடித்தேன். அதற்கு பிறகு நான்கு வருடங்கள் ராஜ்கிரண் அலுவலகத்தில் தான் இருந்தேன். ராஜ்கிரணின் போன் நம்பர் முகவரியை தான் ஆடிஷன் போகும் எல்லா இடங்களிலும் கொடுத்தேன் . என் ராசாவின் மனசிலே திரைப்படத்திற்கு பிறகு , சின்ன கவுண்டர், தேவர் மகன், கிழக்கு சீமையிலே போன்ற பல படங்களில் நடித்தேன்.
ஆனால் எனக்கு ராஜ்கிரண் சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை, கூடவே இருந்து பார்த்துக் கொண்டார் அதிலிருந்து நான் ராஜ்கிரணிடம் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு தான் கிளம்பி வந்தேன். ஆனால் ஊரில் இருந்து வரும்போது நான் வேட்டி சட்டையோடு தான் வந்தேன், அம்மணமாக வரவில்லை. ஆனால் சிலர் பேசும் போது வேட்டி, சட்டை வாங்கி கொடுத்தாரு என்று எல்லாம் சொல்றாங்க. அப்படி எல்லாம் இல்லை. ராஜ்கிரண் சார் தான் எனக்கு கடவுள். அவர்தான் எனக்கு அச்சாரம் போட்டார். ஆனால் அதற்குப் பிறகு நான் இப்போ இவ்வளவு வளர்ந்து வந்திருக்கிறேன் . இதற்கு, என்னுடைய உழைப்பும் முயற்சியும் இருக்கிறது. இப்போது, சுந்தர் சி வரை பல இயக்குனரை பார்த்து விட்டேன் ஆனால் , நன்றி மறக்கும் பழக்கம் எனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.