தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்… வானிலை மையம் அறிவிப்பு..
மேற்கு திசை காற்றோட வேக மாறுபாட்டின் காரணமாக அடுத்தடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி ஆகிய இடங்களின் மலைப்பகுதி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அதிக கன மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் அடித்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இரண்டு நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.