சான் பிரான்சிசுகோவில் ராகுல் காந்தி பேச்சு..!
மக்களுடன் தொடர்பில் இருக்கும் அனைத்து அமைப்பு மற்றும் ஊடங்கங்களையும் ஆர்.எஸ்.எஸ் பாஜக கட்டுப்படுத்துகின்றது.
மக்களை நேரில் சந்திப்பதற்காகவே பாரத ஜோடோ நடைப்பயணத்தை மேற்கொண்டேன். அதை தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அதை தடுக்க வேண்டுமென பலரும் பல திட்டங்களை செயல் படுத்தினர். அவர்களின் திட்டம் தோல்வி அடைந்தது. என் பயணம் வெற்றி கண்டது.
இந்தியாவில் சிறு பான்மையினர் மற்றும் ஏழைமக்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கின்றனர். பட்டியல இன மக்கள், பழங்குடியினர் வாழ்வதற்கு இந்தியா சிறந்த இடமாக இல்லை, வெறுப்பை விட அன்பை அதிகம் நம்புகிறவன் நான். இந்தியாவில் அனைவரும் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள், என “அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோ” நகரில் உள்ள இந்தியர்களிடையே, ராகுல் காந்தி இவ்வாறே பேசினார்.