Wednesday, October 4, 2023
Madhimugam
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

”அனைத்தும் கலந்ததுதான் இந்தியா”… சுதந்திர தின வாழ்த்து சொன்ன காங்கிரஸ் முன்னாள் தலைவர்..!

August 15, 2023

RelatedPosts

தமிழக   ஆளுநர்     ஆர்.என்.ரவியை சந்திக்க இது  தான்  காரணம்..!! தேமுதிக பொருளாளர்   பிரேமலதா  ஓபன்  டாக்..!! 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறினாலும், அமலுக்கு வர…!! எதிர்பார்ப்பில் வைக்கப்பட்டுள்ள ட்விஸ்ட்..!!  

குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே கர்நாடக நீர் திறக்கப்படும்..!! உச்சநீதிமன்றத்தின் அடுத்த கட்ட முடிவு என்ன..?  

0
(0)

இந்தியா என்பது ஒரே கலாச்சாரம், ஒரே வரலாறு, ஒரே மதம் கிடையாது; அனைத்தும் கலந்ததுதான் இந்தியா என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். 

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;-

Bharat Mata is the voice of every Indian 🇮🇳 pic.twitter.com/7w1l7VJaEL

— Rahul Gandhi (@RahulGandhi) August 14, 2023

“என்னுடைய வீடாக நான் நினைக்கும் இந்த நிலப்பரப்பில் கடந்த ஆண்டு 145 நாட்கள் நான் நடைபயணம் மேற்கொண்டேன். எதற்காக இந்த நடைபயணத்தை நீங்கள் மேற்கொண்டீர்கள்? இந்த பயணத்தில் எதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள்? என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் மிகவும் நேசித்த ஒன்றைப் பற்றி முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். நான் நேசித்தது மலைகளையா? கடல்களையா? ஒரு நபரையா? மக்களையா? அல்லது கொள்கைகளை நேசித்தேனா? என்று தெரிந்து கொள்ள எண்ணினேன்.

நடைபயணத்தை தொடங்கும்போது மிக எளிதாக இருக்கும் என்று நினைத்து தொடங்கினேன். ஆனால் சில நாட்களில் எனது முழங்காலில் நீண்ட நாட்களுக்கு முன்னால் ஏற்பட்ட காயத்தால் வலி அதிகமானது. எனது மருத்துவரும் எங்களுடன் வந்தார். ஒவ்வொரு முறை நான் நடைபயணத்தை நிறுத்தி விடலாம் என்று நினைக்கும்போதும், யாராவது ஒருவர் என்னிடம் வந்து எனது பயணத்தை தொடர்வதற்கான ஆற்றலை எனக்கு வழங்கினார்கள். அடர்ந்த காட்டில் இருக்கும் மின்மினிப் பூச்சிகளைப் போல, இந்த ஆற்றல் எங்கும் நிறைந்திருந்தது. எனக்கு தேவைப்பட்ட நேரத்தில் எனக்கு வழிகாட்டியாக அது அமைந்தது.

எனது நடைபயணம் தொடர்ந்து நடைபெற்றது. நாளுக்கு நாள் மக்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. எனது முழங்கால் வலியை மறந்துவிட்டு மக்களோடு நடக்க ஆரம்பித்தேன். பிறர் கூறுவதை நன்றாக கவனித்துக் கேட்க தொடங்கினேன். ஒரு நாள் ஒரு விவசாயி என்னை சந்தித்துப் பேசினார். அவரது வயலில் அழுகிப் போன பயிர்களை என்னிடம் காட்டி கண்ணீர் சிந்தினார். அவரது குழந்தைகளை நினைத்து அவர் பயம் கொண்டிருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. அவரிடம் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. எனது நடைபயணத்தை நிறுத்தி, அவரை கட்டியணைத்துக் கொண்டேன்.

இதே போன்ற சம்பவங்கள் மீண்டும், மீண்டும் நடந்தன. குழந்தைகள், தாய்மார்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், கடைக்காரர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலர் இதே போல் என்னிடம் வந்து பேசினார்கள். என்னிடம் பேசும் நபரைத் தவிர வேறு எதிலும் எனது கவனம் செல்லவில்லை. தெருக்களில் யாசகம் பெற வற்புறுத்தப்பட்ட குழந்தைகள் குளிரில் நடுங்குவதைப் பார்த்த பிறகு, வெறும் டி-சர்ட் அணிந்து கொண்டு எனது முழு நடைபயணத்தையும் தொடர்வது என முடிவு செய்தேன். நான் நேசித்த பொருள் எது என்பது சட்டென எனக்கு விளங்கியது.

பாரத மாதா என்பது வெறும் நிலம் அல்ல. ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே வரலாறு கொண்டது அல்ல. மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஜாதிகளும் அல்ல. இந்தியா என்பது ஒவ்வொரு தனிப்பட்ட இந்தியனின் பலமான அல்லது பலவீனமான குரல். அந்த குரல்களுக்குப் பின்னால் இருக்கும் மகிழ்ச்சி, பயம் மற்றும் வலி தான் இந்தியா. எனது சொந்த குரலையும், ஆசைகளையும், லட்சியங்களையும் அமைதியடையச் செய்த பிறகு தான் இந்தியாவின் குரலை என்னால் கேட்க முடிந்தது. அமைதியாகவும், பணிவாகவும் இருப்பவர்களால் மட்டுமே இந்தியாவின் குரலை கேட்க முடிகிறது. இது எவ்வளவு எளிமையானதாக இருந்துள்ளது. கடலில் கிடைக்கும் ஒரு பொருளை நான் ஆறுகளில் தேடிக் கொண்டிருந்தேன்.” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Loading

How useful was this post?

Click on a star to rate it!

ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Tags: 77வது சுதந்திரதினம்எம்.பி. ராகுல் காந்திசுதந்திர தினவிழாராகுல் காந்தி
ADVERTISEMENT
Previous Post

மதுவால் நண்பரையே மர்டர் செய்த சக நண்பர்..!

Next Post

ஆளுநர் இதயம் கரையாது..! மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன முதலமைச்சர்..!!

Related Posts

அரசியல்

தமிழக   ஆளுநர்     ஆர்.என்.ரவியை சந்திக்க இது  தான்  காரணம்..!! தேமுதிக பொருளாளர்   பிரேமலதா  ஓபன்  டாக்..!! 

அரசியல்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறினாலும், அமலுக்கு வர…!! எதிர்பார்ப்பில் வைக்கப்பட்டுள்ள ட்விஸ்ட்..!!  

இந்தியா

குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே கர்நாடக நீர் திறக்கப்படும்..!! உச்சநீதிமன்றத்தின் அடுத்த கட்ட முடிவு என்ன..?  

அரசியல்

பார்க்க மறந்த  சில  முக்கிய செய்தியை  ஜஸ்ட் ஒரு க்ளிக்ல  படிங்க..!!

இந்தியா

மீண்டும் மணிப்பூரில் வெடித்த வன்முறை..!!

இந்தியா

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு கிடைத்த வெற்றி..!!  

அரசியல்

நட்பாக இருந்தால் மட்டுமே இந்த பிரச்சனை முடிவிற்கு வரும்..!! நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  பேச்சு..!!

இந்தியா

கர்நாடகாவில்  தொடரும்  கடையடைப்பு   போராட்டம்..!!

அரசியல்

கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் எஸ்கேப் ஆன அண்ணாமலை..!! கடுப்பான ஆனா  தொழிலாளர்கள்..

Next Post

ஆளுநர் இதயம் கரையாது..! மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன முதலமைச்சர்..!!

Discussion about this post

25
Music

இதில் யாருடைய இசையில் மேஜிக் இருக்கிறது.

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

லேட்டா வந்தாலும்  பெஸ்ட்னு  சொல்ல வைக்கும்  விவோ v29 ப்ரோ..!! 

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பணம் வரவு அதிகரிக்க வழிபட வேண்டிய தெய்வங்கள்..?

திருப்பதி  ஏழுமலையான்  கோவிலில்  குவிந்த லட்சம் கணக்கான   பக்தர்கள்..!! இந்த  ஒரு  தரிசனம்  பார்த்தல்  போதும்..!!

தமிழக   ஆளுநர்     ஆர்.என்.ரவியை சந்திக்க இது  தான்  காரணம்..!! தேமுதிக பொருளாளர்   பிரேமலதா  ஓபன்  டாக்..!! 

விமானநிலையத்தில் நடிகர் விஜய் வைரலாகும் புகைபடம்..!!

Trending News

பணம் வரவு அதிகரிக்க வழிபட வேண்டிய தெய்வங்கள்..?

திருப்பதி  ஏழுமலையான்  கோவிலில்  குவிந்த லட்சம் கணக்கான   பக்தர்கள்..!! இந்த  ஒரு  தரிசனம்  பார்த்தல்  போதும்..!!

தமிழக   ஆளுநர்     ஆர்.என்.ரவியை சந்திக்க இது  தான்  காரணம்..!! தேமுதிக பொருளாளர்   பிரேமலதா  ஓபன்  டாக்..!! 

விமானநிலையத்தில் நடிகர் விஜய் வைரலாகும் புகைபடம்..!!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.