கேள்விக்குறி ஆகிய ஜனநாயகம்..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!
நாட்டில் ஜனநாயகத்தின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகி இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், நாட்டில் ஜனநாயகத்தின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாக உள்ளதாக கூறினார்.
ஜனநாயகத்திற்காக எமர்ஜென்சியை எதிர்த்து, அதற்காக திமுக தனது ஆட்சியை இழந்தாக குறிப்பிட்ட முதலமைச்சர், எமர்ஜென்சியின்போது ஆட்சியை விட ஜனநாயகத்திற்கே ஆதரவு என கூறியவர் கலைஞர் கருணாநிதி என கூறினார்.
தற்போது நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா, மக்களாட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், எதிர்கட்சிகளை மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற பணிகளில் பாஜக. ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்
இந்தியாவை காப்பாற்றுவதற்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்..