உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோனை வழங்கும் மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(மார்ச்.09) தொடங்கி வைத்தார்.
அதன்படி, 104 என்ற எண்ணை தொடர்புகொண்டு உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் இலவச ஆலோசனை பெறலாம் என்றும் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனில் மருத்துவ கல்வி படித்து வரும் மாணவர்களின் எதிர்கால மருத்துவ படிப்பை தொடர்வதற்கு மத்திய அரசு உதவிட வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இவர்களை சேர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post