“பெட்ரிஷியன் கல்லூரி-பன்னாட்டுக் கருத்தரங்கம்”
சென்னை அடையார் பெட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் துறை சுழற்சி மற்றும் கோவை பிஷப் அம்ப்ரோஸ் கல்லூரி, இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
நீடித்த வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை நஜ்முதின் சுல்தான் தொடங்கி வைத்தார்.
இதில், சிறப்பு விருந்தினராகக் சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியை சாந்தி கலந்துகொண்டார். இணைய வழி மற்றும் நேரடியாக நடைபெற்ற கருத்தரங்கில் சுமார் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், செசிஸ் தாசன், காயத்ரி , பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குநர் ஸ்டானிஸ் லாஸ், கல்வி முதன்மையர் பாத்திமா வசந்த், கல்லூரி முதல்வர் ஆரோக்கிய மேரி கீதா தாஸ், துணை முதல்வர் அனந்த பிரியா, துறைத் தலைவர் சுவீட்டி மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.