விஷக் குளவிகளை தீயணைப்புத் துறையினர் அழித்தனர்…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த விஷக் குளவிகளை தீயணைப்புத் துறையினர் அழித்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அனங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பில் விஷக் குளவிகள் கூடு கட்டி அவழியாக செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
இதனையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் மருந்து கலந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த விஷக் குளவிகளை அழித்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)