நீலகிரியில் குழந்தைகள் பாதுகாப்பு உரிமை குறித்த சிறப்பு அமர்வு விழிப்புணர்வு நடைபெற்றது…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் 5 குறித்த சிறப்பு அமர்வு விழிப்புணர்வு நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனுங்கோ தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் குறித்த சிறப்பு அமர்வு விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த முகாமில் 202 மனுக்கள் பெறப்பட்டன.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் தலைவர் ,
கோத்தகிரியில் கடந்த 7ம் தேதி 15 வயது சிறுமிக்கு காவல்துறை கைவிலங்கு இட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தது தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தெரிய வந்ததையடுத்து, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நேரில் பேசி விரிவான அறிக்கையை ஆணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளதாகவும், மேலும், பாதிக்கப்பட்ட குழந்தையிடம் நேரில் விசாரணை நடத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.