புழல் சிறையில் கைதி தற்கொலை..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!
சென்னை புழல் சிறையில் பெண்கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..,
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஜீயபுரத்தில் மூதட்டியை கொன்று நகையை கொள்ளையடித்த வழக்கில் காந்திமதி வயது 50 என்ற பெண் கைது செய்யப்பட்டார்..
கைது செய்யப்பட்ட காந்திமதியை புழல் சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.., இலவச சட்ட உதவி மூலம் ஜாமீன் கிடைத்த காந்திமதிக்கு உறவினர்கள் யாரும் உறுதி பத்திரம் கொடுக்காததால் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்..
சிறையில் திடிரென காந்திமதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.., அதிர்ச்சி அடைந்த காவலர்கள் காந்திமதியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.., பின் காந்திமதியின் இந்த தற்கொலைக்கு பின் வேறு ஏதாவது காரணம் இருக்குமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..