“சனாதன எதிர்ப்பு போராளி..” துணை முதலமைச்சர் உதயநிதிக்கு அர்ச்சகர்கள் வாழ்த்து..!
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஒரு வருடமாக போராடி வரும் நிலையில் “சனாதனத்திற்கு எதிராக போர் செய்வோம்.. சமத்துவ சமூக நீதியை கருவறையில் நிலை நாட்டுவோம்” என அவர் கூறியதற்கு அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்..
சனாதனம் என்கிற சொல் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்பது நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பது தான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது. எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதே சனாதனத்தின் பொருள்..
இளைஞர்கள் நலன் மற்றும் மருத்துவத்துறை அமைச்சராக இருந்த திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்., துணை முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டுமென அமைச்சர்கள் வலியுறுத்தலின் படி பல்வேறு விமர்சனங்களை கடந்து நேற்று தமிழகத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்..
இந்த விழாவனது ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.. இதில் 6 இலக்கா அமைச்சர்கள் பதவி எற்றனர்.., துணை முதலமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்., நடிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்..
அந்த வகையில் பயிற்சி அர்ச்சகர்கள் மாணவர் சங்கத்தினர், மற்றும் தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கத்தினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.. அதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக பதவி ஏற்றது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.., அதில் அவர்கள் கூறியிருப்பதாவது..
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக சனாதன தர்மம் ஒழிப்பு மாநாடு சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என கூறினார். ஆனால் சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அவர் பேசியதாக “பாஜக ஒரு பொய்யான தகவலை இணையத்தில் பரப்பி பெரும் சர்ச்சையை கிளப்பியது..
அதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கானது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.. அதன் பின் ஜூன் 25ம் தேதி பெங்களூர் 42-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ் திரேட் முன்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆஜரானார். இன்றைய விசாரணையின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியது.
கடந்த ஒரு வருடமாக சனாதனத்திற்கு எதிராக போராடி வந்த “சனாதன எதிர்ப்பு போராளி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக பதவியேற்றதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு நியமன அச்சகர்கள் சங்கம் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறோம்..
தந்தை பெரியார்., அண்ணா., கலைஞர் அவர்களின் கொள்கையை பின்பற்றி வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது துணை முதலமைச்சராக பதவி ஏற்று இருபதற்கு எங்கள் சங்கதினர் சார்பில் வாழ்த்துகிறோம் மென்மேலும் அவரது பணி சிறக்க வேண்டும்..
அவர் துணை முதல்வராக பதவி ஏற்று இருப்பது தமிழக அரசியலில் இளைஞர்களின் அத்தியாயம் தொடங்கியதை காட்டுகிறது. கோயிலில் உள்ள அதிகாரத்தை வைத்து தான் தமிழ் சமூகத்தில், சாதிய வர்ணாசிரம கட்டமைப்பு நிலை நிறுத்தப்பட்டது. ஈராயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் ஆலயங்களில், தங்களைத் தவிர யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று நிலையான சனாதன அதிகாரத்தை கொண்டுள்ளார்கள் குறிப்பிட்ட சில ஆயிரம் பேர். இறைவனின் ஆலயங்களில், சமத்துவத்தை நிலை நாட்டுவதே சமூகநீதி என சொன்னார்கள் தற்போது அதற்கு எல்லாம் ஒரு அத்தியாயம் கிடைத்தது போல உங்கள் பதவி… இப்போது எங்களுக்கு.
தமிழகத்தின் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தையும் துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் பெரிய கோயில்களில் நிறைவேற்றுவார் என்ற நம்புகிறோம். அவரின் பணி சிறக்க மனதார வாழ்த்துகிறோம்.. இறைவனை வேண்டுகிறோம் நன்றி.” என கூறியுள்ளனர்.
சனாதன தர்மம் ஒழிப்பு..! உதயநிதி ஸ்டாலின் வழக்கிற்கு பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு..!