தமிழ்நாட்டிற்கு வருகை தரும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு..!! வரவேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..!!
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மைசூர் வந்த குடியரசுத் தலைவர்.., அங்கிருந்து சாலை மார்க்கம் வழியே தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்கிறார்.., அங்கு “தி எலிபன்ட் விஸ்பரஸ்” ஆவண படத்தில் இடம் பெற்ற பெள்ளி என்ற பகுதிக்கு செல்வதோடு யானைகள் முகாமையும் பார்வையிட இருக்கிறார்.
அங்கிருந்து மீண்டும் டெல்லிக்கு சென்று.., டெல்லியில் இருந்து இன்று மாலை 6:30 மணிக்கு சென்னை வர இருக்கிறார். விமான நிலையத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் இணைந்து முதலமைச்சர் முக.ஸ்டாலினும் வரவேற்க இருக்கிறார்கள்.
இன்று இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கும் திரெளபதி முர்மு நாளை காலை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெரும் 165 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்க உள்ளார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிட தக்கது.
நாளை மாலை ஆளுநர் மாளிகையில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, மகாகவி பாரதியார் புகை படத்தை திறந்து வைக்க உள்ளார். படத்தை திறந்து வைத்த பின் மறுநாள் காலை ஹெலிகாப்டர் மூலம் திரெளபதி முர்மு பாண்டிச்சேரி செல்கிறார்.
இன்று குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு மசினகுடி மற்றும் முதுமலை தெப்பக்காடு பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 10 நச்சல் தடுப்பு பிரிவினர்.., வனப்பகுதிகளில் தேடுதல் பணியில் செயல்பட்டு வருகின்றனர்.
தேடுதல் பணிக்காக இன்று நண்பகல் 12மணி முதல் மாலை 5 மணி வரை, கல்லட்டி மலைப்பாதை மூடப்பட்டுள்ளது.., மேலும் இரண்டு நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதித்துள்ளது.