ஆவாரம்பூவை இப்படி செய்து சாப்பிடுங்க..! இதுல இவ்ளோ நன்மைகளா..!!
ஆவாரம்பூ உடல்சூட்டைப் போக்கக்கூடியது பூ முதல் வேர்வரை அனைத்துமே உடலுக்கு நன்மை தரக்கூடியவை. ஆவாரம்பூ உடலில் உள்ள சூடு தணிக்கும், நாவறட்சி நீக்கும்,கண் எரிச்சலை போக்கும். மூலநோயை சரிசெய்யும். சருமத்தை பொலிவாக்கும். உடலை பலப்படுத்தும். சர்க்கரைநோயின் குறைக்கும்.
தேவையான பொருட்கள்:
ADVERTISEMENT
ஆவாரம்பூ – ஒரு கைப்பிடி
தேங்காய்த்துருவல்-ஒரு கப்
காய்ந்த மிளகாய் -2
புளி, உப்பு – சிறிது
பூண்டு – 2 பல்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய்விட்டு சூடாக்கிக் கொள்ள வேண்டும். அதில் தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், பூண்டு, ஆவாரம்பூ, புளி, உப்பு என ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு, கருகிடாமல் வதக்கிக் கொள்ள வேண்டும். ஆறிய பிறகு, மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். கரண்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கிய பின் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து, சட்னியில் சேர்த்துப் பரிமாறவும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.