உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி..!! பதவி ஏற்கப்போகும் 2 புதிய அமைச்சர்கள்..? தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று நிகழப்போகும் மாற்றம்..!!
தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் 27-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 3 மூத்த அமைச்சர்களின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கு பொறுப்புகள் வழங்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இன்று மாலை வெளியாகும் என சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தூக்கி நிற்கும் நிலையில் அவரை துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் வெளியாகியுள்ளது..
அதே சமயம் அமைச்சர்கள் மெய்யநாதன் அல்லது சி.வி.கணேசன் இவர்கள் இருவரில் ஒருவரின் பதவி பறிக்கப்பட போவதாகவும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் புதிதாக அமைச்சர் பதவி கொடுக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2 முறை அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.