காற்றில் கலந்த மாசு..!! விதிக்கப்பட்ட தடை..!! அதிஷி போட்ட அதிரடி உத்தரவு..!!
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது
டெல்லியில் தற்போது குளிர் காலம் தொடங்கி உள்ள நிலையில் காற்று மாசு அதிகரித்து காற்றில் நச்சு புகைகள் கலந்து காற்றின் தரக்குறியீடு 457 ஆக அதிகரித்து இருப்பதால் கிராப் திட்டத்தின் 4 வது நிலை கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு கொண்டுவர உள்ளதாக அந்த மாநில முதல்வர் அதிஷி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் எனவும். தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், மின் இணைப்புகள், குடிநீர் குழாய்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளின் வேலையை நிறுத்த வேண்டும் எனவும், மாநில அரசு, மாநகராட்சி ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்றவும் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், சிஎன்ஜி, மற்றும் பிஎஸ் -4 பெட்ரோல் வாகனங்கள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிஎஸ் 3 பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..