ADVERTISEMENT
ஆங்கில வருடபிறப்பிற்கு பழனி கோவிலில் பக்தர்கள் கூட்டம்…
ஆங்கில வருடபிறப்பு முன்னிட்டு பழனி கோவிலிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஆங்கில வருட பிறப்பு மற்றும் பள்ளி விடுமுறை, மற்றும் மார்கழி மாதம் ஐயப்ப பக்தர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்ததால் மின் இழுவை ரயில், ரோப்கார் நிலையம் மலைக்கோவில் மூன்று மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் பாதுகாப்பு வசதிக்காக காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், மற்றும் ஊர் காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.