பிரதமர் மோடி அவர்கள் மனிதநேயத்துக்கு எதிராக பேசி வருகிறார்..!! மன்சூர் அலிகான் அனல் பேச்சு..!!
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் மாநில தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் நான் பாராளுமன்றத்திற்கு சென்றால் வெட்டு ஒன்னு துண்டு என்று தான்.
மக்களுக்காக பேசுவேன் என்னுடைய நடைமுறை அப்படி தான் என கூறிய அவர் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் சிரிக்க வைக்கின்ற ஒரு கதாநாயகன் ஆனால் அதுபோல தொகுதி மக்களை சிரிக்க வைக்க வேண்டும். மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அவரது மகன் கதிர் ஆனந்த் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதியின் போது ரெட்டிதோப்பு மேம்பாலம் கட்டி தருவதாக கூறி விட்டுச் சென்றுள்ளார். ஆனால் கட்டவில்லை அதற்காகத்தான் நான் வந்துள்ளேன். 30ஆம் தேதிக்கு மேல் வாளை சுருட்டுகிறேன் பாராளுமன்றத் தொகுதியில் மக்களுக்கு மேம்பாலம் கட்டித் தருவது ஒரு ஜுஜூபி மேட்டர் என்று கூறிய அவர் குப்பை கொட்டுவதற்கு கூட மக்களுக்கு வசதி இல்லை என கூறுகின்றனர்.
அப்படி மக்கள் தெரிவித்ததால் நீங்கள் குப்பையை எம்.எல் ஏ, எம்.பி, கவுன்சிலர் வீட்டு முன்பு கொட்ட வேண்டும் தானே என அறிவுரை வழங்கினார். மேலும் பிரதமர் மோடி அவர்கள் தொடர்ந்து மனிதநேயத்துக்கு எதிராக பேசி வருகிறார்.
இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நாட்டில் சங்க் பரிவாருக்கு ஆதரவாக செயல்படுகிறாரோ என்னவோ இது போன்று கொள்கை மனப்பான்மையோடு நாட்டின் பிரதமர் செயல்படுவது வன்மையாக கண்டிக்க தக்கது என தெரிவித்தார்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..