மாஸ்கோவிற்கு பிரதமர் மோடி கண்டனம்..!!
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு அருகில் குரோகஸ் சிட்டி ஹால் கச்சேரி அரங்கிற்குள் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், கச்சேரி அரங்கிற்குள் நுழைந்த ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், 115 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
இத்தகைய கொடூர தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த துயரமான நேரத்தில் ரஷிய அரசு மற்றும் மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்ரும் பலியானோர் குடும்பத்திநருக்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ரஷ்ய கூட்டமைப்புக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்றும், தீவிரவாதம் மனித குலத்திற்கும், அமைதிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஷியாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது.