பஹால்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் மீது போர் விமானங்களை கொண்டு தாக்கியது. இந்தியாவின் போரை கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் முன்னின்று நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் மீது ரஃபேல் விமானம் கொண்டு தாக்கிய பெண் பைலட் ஷிவாங்கி சிங் பற்றிய தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சியால்கோட் அருகே ரஃபேல் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதனை ஓட்டி சென்ற பெண் விமானி ஸ்குவாட்ரன் லீடர் ஷிவாங்கி சிங், பாகிஸ்தான் படையினரிடத்தில் பிடிபட்டதாகவும் வீடியோ ஒன்று வெளியாகனது. ஆனால், இதனை பிரெஸ் இன்பார்மேஷன் ஆப் இந்தியா என்ற பேக்ட் செக் அமைப்பு மறுத்துள்ளது. இந்த வீடியோ பாகிஸ்தான் ஆதரவாளர்களால் போலியாக தயாரிக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிவாங்கி சிங்இ ந்தியாவில் பத்திரமாக உள்ளார் என்றும் விமானப்படை அறிவித்துள்ளது.
வாரணாசியைச் சேர்ந்த ஷிவாகி சிங் ரஃபேல் விமானத்தின் முதல் பெண் பைலட் ஆவார். கடந்த 207ம் ஆண்டு முதல் பைலட்டாக பணியாற்றுகிறார். முன்னதாக மிக் 29 பைசன் குழுவில் இருந்தவர், பின்னர் ரஃபேல் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.