பவன் கல்யாண் கொலை முயற்சி காரணமான பிரமுகர்..!! பரபரப்பான ஆந்திரா..!!
தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் நடக்க உள்ள நிலையில், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் லோக்சபா தேர்தல் உடன் சட்டசபைத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதனால் ஆந்திரா மாநிலங்களில் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் லோக்சபா தேர்தல் + சட்டசபைத் தேர்தல் என இரண்டிற்கும் தற்போது பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இரண்டு தேர்தலும் அந்த மாநிலங்களில் ஒரே கட்டமாக மே-13ம் தேதி நடக்க உள்ளது.
ஆந்திராவை பொறுத்தவரையில் 175 சட்டசபை தொகுதிகளும், 25 லோக்சபா தொகுதிகளிலும் இருக்கிறது. இப்படி இரண்டிற்கும் தேர்தல் நடப்பதால் அங்கே அரசியல் கட்சிதலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி புரளியை கிளப்பியுள்ளார்.., அதவாது தனக்கு பலரும் கொலை மிரட்டல் விடுவதாகவும் பாதுகாப்பு கேட்டால் காவல்துறையினர் நிராகரிப்பு செய்வதாக கூறி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சமீபத்தில் தான் கலந்து கொண்ட கூட்டத்தில் சிலர் மெல்லிய கத்திகளால் தன்னை தாக்க முயன்றதாகவும், என்னைச் சந்திக்க மக்கள் அதிக அளவில் வரும்போதெல்லாம், ஒரு சிலர் பிளேடுகளுடன் கூட்டத்திற்குள் ஊடுருவி கைகளில் காயங்கள் ஏற்படுத்தி கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
என்னை கொல்ல முயற்சி செய்பவர்களிடம் இருந்து என்னை பாதுகாப்பதே என் பாதுகாப்பு துறைக்கு வேலையாக உள்ளது. இதை எல்லாம் செய்பவர்கள் வேறு யாரும் இல்லை எதிர்கட்சி தலைவர் தான். அதில் எனக்கு நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் என்னை சந்திக்க குறைந்தது 200 கட்சி உறுப்பினர்கலாவது வருகிறார்கள். அப்போது உரியப் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படும். அதேநேரம் பெரிய கூட்டங்களின் போது, என்னைத் தாக்க வேண்டும் என்பதற்காகச் சிலர் நிர்வாகிகளை போல ஊடுருவி உள்ளே நுழைகின்றனர்.
குறிப்பாக அவர்கள் பிளேடை கையில் எடுத்து வந்து என்னை தாக்குகிறார்கள். என்னை காலி செய்ய வேண்டும் என்பதற்காகவே பல சதி வேலைகள் நடக்கிறது.., சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் இந்த செயல் பங்கமாக அரங்கேறியது. அப்போது என்னை சுற்றி இருந்த தொண்டர்களே என்னை காப்பாற்றினார்கள்.
ஆந்திரா பிரதேசத்தில் இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அனைத்தும் தனித்துப் போட்டியிடுகிறது. அதே சமயம் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. தெலுங்கு தேசம்17 இடங்களில் போட்டியிடும் நிலையில், பாஜக 6 சீட்களிலும், ஜனசேனா 2 இடங்களிலும் போட்டியிடுகிறது. அங்கே முக்கியமாக இந்த இரு அணிகளுக்கு இடையே தான் போட்டி நடக்கிறது. இதை தவிர இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். வாக்கு அளிப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அதை யாருக்கு அளிக்கிறோம் என்பதில் இருக்கிறது.