ADVERTISEMENT
காவல் அதிகாரி அதிகப்பணி சுமை காரணமாக தற்கொலைக்கு முயற்சி – “அரியலூர்”
அரியலூரை சேர்ந்த காவல் அதிகாரி அதிகப்பணி சுமை காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் தா.பழூர் காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் இருந்த எறும்பு மருந்தை சாப்பிட்டதாக உறவினர்களிடம் தெரிவித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது, அதிகப்பணி சுமை காரணத்தால் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.