ஜி20 உச்சி மாநாட்டின் விருந்திற்கு நாட்டின் எதிர்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவை ஒன்றிய அரசு முறையே அழைப்பு விடுக்காததிற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்தியா தலைமை தாங்கி நடத்தும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதைப்போல உறுப்பினர் அல்லாத பல்வேறு நாடுகளும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றன.
இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு குடியரசு தலைவர் அளிக்கப்படும் விருந்திற்கு நாட்டின் எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை ஒன்றிய பாஜக அரசு அழைக்கவில்லை. இந்த சம்பவம் எதிர்கட்சிகளிடையே வெறுப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
உலகத் தலைவர்களுக்கான அரச விருந்துக்கு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரை வேறு எந்த ஜனநாயக நாட்டின் அரசாங்கமும் இதுவரை அழைக்காமல் இருந்ததாக எனது நினைவுக்கு இல்லை.
ஜனநாயகம் இல்லாத அல்லது எதிர்க்கட்சி இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும்.
இந்தியா, அதாவது பாரதம், ஜனநாயகமும் எதிர்க்கட்சியும் இல்லாமல் போகும் நிலையை எட்டவில்லை என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
I cannot imagine any other democratic country's government not inviting the recognised Leader of the Opposition to a state dinner for world leaders
This can happen only in countries where there is no Democracy or no Opposition
I hope India, that is Bharat, has not reached a…
— P. Chidambaram (@PChidambaram_IN) September 9, 2023
Discussion about this post