ஓ.பி.எஸ். அதிமுக சின்னம், பெயர், கொடி பயன்படுத்தலாமா..?
அதிமுக சின்னம், பெயர், கொடி பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு விதித்த நிரந்தர தடையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கில் பதிலளிக்க ஒ.பி.எஸ். தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி, அதிமுக-வின் பெயர்,கொடி, சின்னம், ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
வழக்கில் இரு தரப்பு இறுதி வாதங்களும், மார்ச் 12ஆம் தேதி முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்தனர்.
இந்த மனு மீதான விசாரணை தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு, அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில், தான் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
