தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியானது ஜூன் 7க்கு மாற்றப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
எனவே ஜூன் 7ம் தேதி வாக்கில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அனைத்து வகுப்புகளுக்குப் பள்ளிகளத் திறக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறப்பட்டது.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
Discussion about this post