“நீங்கள் இதை செய்தால் மட்டும் போதும்..” மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை..!
திராவிட மாடல் ஆட்சியானது உயர் கல்வியின் பொற்காலமாக ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக திகழ்ந்து வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியின் நூறாவது ஆண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
“சென்னையை சுற்றி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏராளமான கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களை உருவாக்கியுள்ளோம். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நிலை இருந்ததா..? இல்லை.. தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் அப்போது.. கல்விதான் அழிக்க முடியாத செல்வம் என பலரும் சொல்லுகின்றனர். அந்த செல்வம் அப்போது எல்லோரும் கிடைக்கவில்லை என்று சொல்வதைவிட கொடுக்கப்படவில்லை என சொல்ல வேண்டியுள்ளது. காலக்கட்டத்தில், இங்கே பெருமையோடு பேசினார்கள்.
இலயோலா கல்லூரியின் நூற்றாண்டு துவக்க விழாவில் மாணவர்களுடன் கழிந்த மாலைப் பொழுது…
நூற்றாண்டைக் கண்டுவிட்ட இந்தக் கல்வி நிறுவனம் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்களித்து ஆயிரமாண்டு காண வாழ்த்தினேன்!#LoyolaCentenary pic.twitter.com/aCxsoIrBqW
— M.K.Stalin (@mkstalin) August 1, 2024
சேவை மனப்பான்மையுடன் இந்த லயோலா கல்லூரி தொடங்கப்பட்டது. அருட்தந்தை பிரான்சிஸ் பெட்ரம் S.J. மற்றும் அவருடைய சக இயேசு சபை அருட்பணியாளர்கள் இந்த காலேஜை தொடங்கினார்கள். தமிழ்நாட்டில் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகளையும், கல்லூரிகளையும் உருவாக்கிய தலைவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய பிறந்த நாள் என்பது 1924-ஆம் ஆண்டில் தான் இந்த லயோலா நிறுவனத்துக்கும் அப்போதுதான் அடிக்கல் நாட்டப்பட்டது. மிகவும் சந்தோஷமாக இருந்தது.
1925-ஆம் ஆண்டு தன்னுடைய கல்விப் பணியை இந்தக் கல்லூரி தொடங்கியது. 75 மாணவர்களோடு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி இன்றைக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்தால் மட்டுமே நம்முடைய திராவிட மாடல் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கும். பெருந்தலைவர் காமராசரின் காலத்தில் பள்ளிக் கல்வி என்பது பொற்காலமாக இருந்தது. தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் கல்லூரி கல்வியானது பொற்காலமாக இருந்தது. இன்றைய திராவிட மாடல் ஆட்சியானது உயர் கல்வியின் பொற்காலமாக திகழ்ந்து வருகிறது. என்பதை நினைத்து பெருமையாக உள்ளதாக அவர் கூறினார்.
மாணர்வகளாகிய நீங்கள் படித்தால் மட்டும் போதும் உங்களுக்கான வேலையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.. மாணவர்களான நீங்கள் அறிவுக்களத்தில் உள்ள பயணத்தை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.