துப்பு கொடுப்பவர்களுக்கு “10 லட்சம் ரூபாய்” பரிசுத்தொகையா..!!
பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மார்ச்.1-ஆம் தேதியன்று குண்டுவெடிப்பு சம்பவம் நடைப்பெற்றது.
அடுத்தடுத்து இருமுறை குண்டுகள் வெடித்ததில் 10 போ் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வரும் நிலையில், குண்டுவெடிப்பில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் நபரை குறித்த தகவல் ஏதேனும் தெரிவித்தாலோ அல்லது அவரை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு, 10 லட்சம் சன்மானம் வழங்கப்படுமென தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.
மேலும், தகவல் அளிக்கும் நபரின் அடையாளங்கள் ரகசியமாக வைக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.