துப்பாக்கி குண்டுகளை மறைத்து வைத்திருந்த கருணாஸ்.. கண்டுபிடித்த அதிகாரிகள்..
கருணாஸ்:
தமிழ் சினிமாவின் நடிகரும் இசையமைபாளருமான கருணாஸ் நடிப்பதில் இருந்து விலகி அரசியலில் பணியாற்றி வருகிறார்.
இவர் நந்தா, காதல் அழிவதில்லை, சாமி,வில்லன் போன்ற பல முன்னனி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார்.பின்னர் திண்டுகல் சாரதி,அம்பா சமுத்திரம் அம்பானி ஆகிய திரைபடங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
40துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்:
முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது போது அவர் வைத்திருந்த கைப்பையில் 2 பாக்ஸ்களில் இருந்த 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் துப்பாக்கி குண்டுகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துப்பாக்கி லைசன்ஸ் உள்ளது:
இது குறித்து கருணாஸிடம் விசாரித்த போது தன்னிடம் துப்பாக்கி லைசென்ஸ் இருப்பதாகவும், அதற்கான குண்டுகள் தான் இவை என விளக்கம் அளித்த அவர் விமானத்தில் துப்பாக்கி குண்டுகளை எடுத்துச் செல்லக்கூடாது என்பது தெரியும்,
ஆனால் அவசரமாக புறப்பட்டதால், பையில் இருந்த குண்டுகளை கவனிக்கவில்லை என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது.
விமானத்தில் கருணாஸ் பயணிக்க மறுப்பு:
விமானத்தில் பயணிக்க கருணாஸுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவரிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு சூழல் நிலவியது. இதனால் திருச்சிக்கு செல்லும் விமானம் சுமார் அரை மணி நேரம் தாமதமாக
புறப்பட்டது.
-பவானிகார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”