ஒரிசா மாநிலத்தில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் நடுவர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரிசா மாவட்டம் செளத்வார் என்ற பகுதியில் உள்ள சவுத்வார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், உள்ளூரை சேர்ந்த இரு அணிகளுக்கு இடையே நேற்று (ஞாயிற்று கிழமை) கிரிக்கெட் போட்டி நடத்த முடிவானது.
பெர்ஹாம்பூர் மற்றும் சங்கர்பூர் பகுதியை சேர்ந்த 2 கிரிக்கெட் அணிகள் போட்டியில் பங்கேற்றன. போட்டி நடுவராக, மகிஷிலாண்டா கிராம பகுதியை சேர்ந்த லக்கி ராவத் (வயது 22) என்பவர் செயல்பட்டு உள்ளார்.
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பெர்ஹாம்பூர் அணி வீரர் முதல் பந்திலேயே அவுட் ஆனதாக நடுவராக செயல்பட்ட இளைஞர் அறிவித்துள்ளார். ஆனால் நடுவரின் முடிவை ஏற்கவில்லை எனக்கூறப்படுகிறது.
ஆனால் இந்த போட்டியின்போது, தவறான முடிவை வழங்கி விட்டார் என கூறி மோதல் ஏற்பட்டுள்ளது. நடுவரின் முடிவால், இரு அணியினரும் தகராறில் ஈடுபட்டனர். இந்த மோதல் முற்றியதில், பெர்ஹாம்பூர் அணியின் விளையாட்டு வீரரான ஜக்கா, பேட்டால் லக்கியை தாக்க தொடங்கி உள்ளார்.
இந்த போட்டியை பார்வையாளர்கள் வரிசையில் இருந்து பார்த்து கொண்டிருந்த ஸ்முருதி ரஞ்சன் ராவத் என்ற மோனு என்பவர் ஆத்திரத்தில் கிரிக்கெட் ஆடுகளத்திற்குள் புகுந்து லக்கியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்து உள்ளார். உடனடியாக அவரை, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர். எனினும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறி விட்டனர்.
Discussion about this post