“ஓ.பன்னீர்செல்வம் – தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை”
எந்த காலத்திலும் தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர் செல்வம், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் பிற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)