இனி வந்தே பாரத் ரயிலில் ஏழைகளுக்கும்..!! இந்திய ரயில்வே சொன்ன குட் நியூஸ்..!!
வந்தே பாரத் ரயில் என்பது இந்திய ரயில்வேவால் இயக்கப்பட்டு வரும், ஒரு குறுகிய தூர ரயில் சேவை இந்த வந்தே பாரத் ரயில் குறுகிய நேரத்தில் அதிக தூரத்தை கடந்து விடும். இந்திய நகரங்களை இணைக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.
வந்தே பாரத் ரயில் சேவை முதன் முதலாக பிப்ரவரி மாதம் 15ம் தேதி 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சேவை நாட்டின் மிக முக்கிய நகரங்களில் மட்டும் செயல் படுத்தப்பட்டது. இது போன்ற ரயில் சேவைகளை இந்த ஆண்டு தொடக்கத்தில் பிற மாநிலங்களுக்கு தொடங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி வரை செல்லும் மற்றொரு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கியது. மேலும் இந்த ரயில் சேவை மற்ற மாநிலங்களிலும் தொடங்கப்பட்டது. கோரக்பூர் முதல் லக்னோ வரை ஜோத்பூர் முதல் அகமதாபாத் வரை என மொத்தம் மூன்று புதிய ரயில் சேவைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து கேரளா மாநிலத்தில் நிறுவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கியது. மேலும் இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களை இணைக்கும் விதமாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஏப்ரல் 8ம் தேதி சென்னை முதல் கோயம்புத்தூர் வரை இந்த சேவை இயக்கப்பட்டது. பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில், எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணத்தை விட வந்தே பாரத் கூடுதல் கட்டணத்தில் இருக்கும் என அறிவித்திருந்த நிலையில்.
தற்போது ஏழை மக்களும் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதற்கான வேலைகள் தற்போது சென்னை ஐ.சி.ப் தொழிற்சாலையில் வந்தே பாரத் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மற்ற ரயில்களில் பயணம் செய்யும் நேரத்தை விட வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யும் நேரம் மிக குறைவு என்பதால்.., பலரும் அதில் பயணம் செய்ய விரும்புவார்கள்.., ஆனால் அதில் பயணிப்பதற்கான டிக்கெட்டின் விலை அதிகம் என்பதால், சாமானிய மக்களால் செல்ல முடியாமல் இருந்தது, தற்போது இந்த மாற்றம் பல ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.