புதுச்சேரிக்கு மட்டும் இல்லை…சென்னை மாணவர்களுக்கும் ஹாப்பி நியூஷ்….!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த வருடத்திற்கான 2023-2024க்கான ஆண்டு தேர்வு கடந்த மாதம் மார்ச் -ல் தொடங்கப்பட்டு ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நிறைவு பெற்றது.
பொதுவாக தமிழகத்தில் பள்ளிகளுக்கான இறுதி தேர்வு என்பது ஏப்ரல் மாதம் இறுதி வரை நடக்கும்.ஆனால் இந்த முறை லோக்சபா தேர்தல் காரணமாக முன்கூட்டியே தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது.
பின்னர் வெயிலின் காரணமாக பள்ளிகளுக்கு மே மாதங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு ஜூன் மாததத்தில் பள்ளிகள் திறக்கப்படும்.
ஜீன் 6 பள்ளிகள் திறப்பு:
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு பற்றி பள்ளி கல்விதுறை தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
வெயிலின் தாக்கமும் சற்று குறைந்து கோடை மழையும் வந்தது.இதனால் பள்ளி கல்வி நிறுவனம் ஜுன் 6ல் பள்ளிகள் திறக்கப்படும் என ஆதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.
பள்ளிகள் திறப்பு தள்ளி போனது:
ஆனால் சில தினங்களாக சென்னையில் மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலனை கருதில் கொண்டு ஜுன் 6ம் தேதிக்கு பதில் ஜுன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பவானிகார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”