“நீட் விலக்கு நம் இலக்கு” தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில்..?
தி.மு.க.வை கற்பனையில் கூட அழிக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடத்தப்படும் சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, நீட் விலக்கு நம் இலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழினத்தை தலை நிமிர்த்துவதற்காக பிறந்த இயக்கம் தான் திராவிட இயக்கம் என கூறினார். அவதூறு பரப்பும் நோக்கிலேயே எதிரணியினர் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், அவதூறுகள் பொய் என்பதை நாம் சமூக வலைத்தளங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும் என கூறினார்.
எதிர்மறை விமர்சனம் மூலம் எதிரிகளை வீழ்த்துவதை விட நேர்மறை விமர்சனம் மூலம் கட்சியை வளர்ப்பதே சரியானது என தெரிவித்த முதலமைச்சர். பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்துத் தந்த பாதையில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கூறினார்.
பாஜகவும், அதிமுகவும் நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள் என விமர்சித்த முதலமைச்சர், திமுகவை கற்பனையில் கூட அழிக்க முடியாது என கூறினார். நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், திமுக இளைஞரணி, மருத்துவரணி, மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..