பிணை கைதியான நவீன் பட் நாயக்..! தேர்தலில் புது சர்ச்சை..! பாண்டியன் கொடுத்த பதிலடி..! திகைத்த பாஜக..!
ஒடிசா டிஜிபி வி.கே.பாண்டியன் முதல்வர் நவீன் பட்நாயக்கை பிணையக் கைதியாக நடத்துவதாக ஒரு குற்றம் சாட்டு எழுந்துள்ளது. பாஜக நேற்று காவல்துறை தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) பாண்டியனின் பிடியில் இருந்து பட்நாயக்கை மீட்டு தரக்கோரி புகார் மனு கொடுத்துள்ளனர். தற்போது அது பெரும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநில டிஜிபி அருண்குமார் சாரங்கிக்கு பாஜக மாநில பிரிவின் முன்னாள் தலைவர் சமீர் மொகந்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “ஒடிசாவில் ஒரு முக்கியமான பிரச்சினை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். நம் மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை அவரது முன்னாள் தனிச் செயலாளர் வி.கே.பாண்டியன் சில நாட்களாக பிணைக் கைதியாக இருந்து வருகிறார்.
பிஜு ஜனதா தளம் கட்சி பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாநில முதல்வர் நவீன் பட் நாயக்கை., டிஜிபி பாண்டியன் அவரது அதிகாரங்களை வைத்து முதலமைச்சரை ஒரு பிணைக் கைதியாக நடத்துகிறார்.
தலைமைச் செயலாளரும், நீங்களும் (டிஜிபி) அவருடன் நெறிமுறைப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியுமா..? என நாங்கள் சந்தேகிக்கிறோம் என காவல்துறையினருக்கு இவ்வாறே கடிதம் எழுதியுள்ளார்.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோர் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர் உத்தரவிட்டதின் பெயரில் தலைவர் விகே பாண்டியன் வேலை செய்கிறார்.
கடந்த புதன்கிழமை அன்று, ஒடிசா முதலமைச்சர் ஒரு கூட்டத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த முதல்வராக பாண்டியன் நியமனம் செய்ய சிலர் திட்டமிடுவதாகவும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இது போன்ற பல குற்றச்சாட்டுகளை அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிஜேடி தலைவருமான ஒடிசா முதல்வரின் நெருங்கிய உதவியாளருமான பாண்டியன், நவீன் பட்நாயக்கைக் கைப்பற்றி, சுதந்திரமாகப் செயல்படவிடாமல் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒடிசாவின் அனைத்து மக்களுக்கும் முதலமைச்சரைப் பற்றி தெரிந்துகொள்ள உரிமை உண்டு. எனவே, நீங்கள் ஒரு நீதி அரசராக இருந்து செயல்பட்டு வி.கே.பாண்டியனின் பிடியில் இருந்து முதலமைச்சரை விடுவிக்குமாறும் இதனை ஒடிசா மாநிலத்தின் பத்திரிக்கையாளர்கள் முன் நடத்த வேண்டும் என்று பாஜக குறிப்பிட்டுள்ளது.
மாநிலத்தின் பெரிய நலனுக்காக, இதுபோன்ற பல் முக்கியமான பிரச்சினைக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து, இந்த திசையில் சரியான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும் படி மொஹந்தி இவ்வாறே அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
அதற்கு பதிலளித்த நவீன் பட்நாயக், நான் ஆரோக்கியமாக தான் இருக்கிறேன்.., என்னை யாரும் சிறைபிடிக்க வில்லை, என் மீது அதிக அக்கறை உள்ள பாண்டியன் எப்போதும் என்னோடு இருப்பார்.., வெறும் விமர்சனங்களை செய்து பிரபலமாவதற்காக சிலர் செய்து வரும் வேலைகளை உடனே நிறுத்திக்கொள்ளுங்கள்.
மேலும் பாஜகவைத் தாக்கி பேசிய நாயக், “பொய்க்கும் ஒரு எல்லை உண்டு”. பாஜக ஒவ்வொரு பிரச்சனையாக செய்து மக்களுக்கும் எங்களுக்கும் இடையே வன்முறையை தூண்ட பார்க்கிறது. கடந்த ஒரு மாதமாக மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தேன் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இல்லாத ஒன்றைப் பற்றி பாஜக பேசுவதனால் எந்த ஒரு பயனும் இல்லை. “நீங்கள் அனைவரும் முதலமைச்சரை பற்றி அவதூறாக பேசுவதை பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். இது மிகவும் மோசமான செயல்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் பிஜேடிக்கு எதிரான செயல்களை பாஜக தற்போது தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் அக்கட்சி வெளியிட்ட குறுகிய வீடியோக்களில் முதலமைச்சரே பேசுகிறாரா அல்லது AI மூலம் உருவாக்கப்பட்டதா என பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்..? பாஜக மற்றும் பிஜேடி இடையே ஏற்பட்ட இந்த தாக்குதல் ஒடிசா அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..