நாராயண் சேவாசன்ஸ் தான் அமைப்பு..! மகிழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள்..!
இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும் நாராயண் சேவாசன்ஸ் தான் எனும் அமைப்பு இந்தியா மட்டுமின்றி ஆப்ரிக்க நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாக பொருத்தும் முகாம்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கோவையில் நடைபெற்ற முகாமில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை மூட்டு மற்றும் காலிபர்களுக்கான அளவீடுகள் எடுக்கப்பட்டன.. இதனை தொடர்ந்து அளவீடுகள் எடுக்கப்பட்ட செயற்கை மூட்டுகளை பயனாளிகளுக்கு மருத்துவ குழுவினர் உதவியுடன் பொருத்துவதற்கான முகாம் கோவை இடையர் பாளையம் பகுதியில் உள்ள மகேஸ்வரிபவன் அரங்கில் நடைபெற்றது.
இதற்கான துவக்க விழாவில், நாராயண் சேவாசன்ஸ் தான் அமைப்பின் தலைவர் பிரசாந்த் அகர்வால், உட்பட பலர் கலந்து கொண்டனர்.. இந்த முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து கலந்து கொண்ட 738 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை மூட்டு மற்றும் காலிபர்கள் பொருத்தப்பட்டன..
இதில் 50 க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் தனித்தனியே அரங்குகள் அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைகை, கால்களை பொருத்தி செயல்படுவதற்கான பயிற்சிகளை அளித்தனர்.. சுயமாக நடக்க முடியாமல் உதவியாளர்களுடன் வந்த மாற்றுத் திறனாளிகள் இலவசமாக செயற்கை மூட்டுக்களை பொருத்தி தானாக நடந்து சென்றதை கண்ட உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்..