என் டார்கெட் பிஜேபி இல்ல.., அவங்க தான்..!! எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி..!!
திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர் அருணாச்சலம் அவர்களின் அறிமுக கூட்டம் திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து முன்னாள் துணை சபாநாயகரும், மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையிலும், அதிமுக தலைமை நிலைய செயலாளரும், கோவை மண்டல பொறுப்பாளர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை என்று கூறிதான் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க முடியும், இல்லையென்றால் வாக்கு சேகரிக்க முடியாது.
அதிமுக வெற்றிபெற வேண்டுமென்றால் திமுகவும் அதனைச் சார்ந்த கூட்டணியை தான் நாம் எதிர்கொள்ள வேண்டும். பாஜக முன்பு நான்கு சதவீதம் இருந்தது, தற்போது அதிகபட்சம் 4 சதவீதம் உயருந்துள்ளது.
கோவை திருப்பூரில் திமுக ஆட்சி காலத்தில் பல திட்டங்களை செய்திருக்கலாம். நாம் நெஞ்சை நிமிர்த்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு பூத் ஏஜெட்டுகளும் அந்த பகுதியில் தான் பணியாற்ற வேண்டும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கூட்டணிகளுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிட வேண்டும்.
வரும் தேர்தல் நமக்கு மிகவும் கௌரவ பிரச்சனை, எனவே நாம் அனைவரும் ஒன்று இணைந்து சிறப்பாக செயல்பட்டு 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடி எடப்பாடியிடம் கொடுக்க வேண்டும் நம்முடைய டார்கெட் பாஜகயில்லை அவங்க தான் அதை நினைத்து கொண்டு தொண்டர்கள் மக்களிடம் வாக்கு சேகரிக்குமாறு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.