சமூக வலைதளத்தால் என் வாழ்க்கையே இப்படி ஆனது..! ஊரும் உறவும்-18
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம், அனைவராலும் அதிகம் கவரப்பட்ட ஒன்று.., சிலருக்கு பொழுதுபோக்காக பயன்படுகிறது. சிலருக்கு லாபம் அளிக்கும் ஒன்றாக இருக்கிறது, ஆனால் ஒரு சிலரின் தவறான பயன்பாட்டால் தான் பேர் ஆபத்தில் முடிகிறது.
அப்படி ஆபத்தில் சிக்கிய ஒரு பெண்ணின் கதை பற்றி பாப்போம்.
இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, ரீல்சில் பல காமெடி மற்றும் லவ் வீடியோக்களை டப் மேஷ் செய்து பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் 847 பாலோவர்ஸ் இருந்துள்ளனர்.
அதில் ஒரு ஆண் நபர் பேக் ஐடி மூலம்.., பெண் என்று சொல்லி இந்த பெண்ணுக்கு மெசேஜ் செய்துள்ளார். பெண் என்றுதானே என்று சொல்லி இவரும் இன்ஸ்டாவில் பேசி வந்துள்ளார்.
நான் ஒரு குறும் படம் எடுக்கபோகிறேன்., அதில் நீங்க நடிக்க முடியுமா என்று கேட்டுள்ளார். கதையை உங்களுக்கு மெயில் பண்ணுகிறேன்.., உங்கள் மெயில் ஐடி சொல்லுங்கள் என்று கேட்டும் வாங்கியுள்ளார்.
மெயில் ஐடி கொடுத்ததும், அதை ஹாக் செய்து, அந்த பெண்ணின் அக்கௌண்டில் உள்ள அனைத்து பணத்தையும் எடுத்துள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கும் அந்த பெண் சைபர் கம்ளைண்ட் கொடுக்க முயன்றுள்ளார்.
போனை ஹாக் செய்த அந்த நபர், இதை தெரிந்துக்கொண்டு நீ கம்ளைண்ட் கொடுத்தால், உன் புகைப்படங்களை நிறுவனமாக இருக்கும் படி செய்து வெளியிட்டுவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.
அச்சம் அடைந்த பெண் உதவி கேட்டு, நம்மிடம் வந்தார். இந்த பதிவு இன்ஸ்டாவில் முகம் தெரியாமல் தவிக்கும் அனைத்து பெண்களுக்கும் தான்.
https://cybercrime.gov.in/ என்ற இணையத்தளத்தில் சென்று நீங்கள் புகார் அளித்தால் பெண் உரிமை சட்டத்தின் மூலம் சமந்த பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் பெண்கள் மானம் காப்பாற்ற படுமே தவிர, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்த ஆபத்தும் நேராது.
எனவே பாதிக்கப்பட்ட மற்றும் சிக்கி தவிக்கும் அனைத்து பெண்களும், இந்த சைபர் க்ரைமில் கம்ப்ளைண்ட் கொடுக்கலாம்.