தொழிலதிபர் முகேஷ் அம்பானியும் அவரது குடும்பத்தினரும் விலங்குகள் மீது அலாதி அன்பு கொண்டவர்கள். ஆனந்த் அம்பானி குஜராத்தில் விலங்குகளை பாதுகாக்கவே தனி சரணாலயத்தை ஏற்படுத்தியுள்ளார். முகேஷ் அம்பானி வீட்டில் ஹேப்பி என்ற கோல்டன் ரெட்ரிவர் நாய் இருந்தது. வீட்டில் அனைவருக்கும் இந்த ஹேப்பிதான் செல்லம். கடந்த ஆண்டு நடைபெற்ற அனந்த் அம்பானி , ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் போது ஹேப்பியின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், ஹேப்பி நாய் இறந்து விட்டதாக அம்பானி குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இது குறித்து அம்பானி குடும்பத்தினர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஹேப்பியின் போஸ்டருடன் ஒரு உணர்வுப்பூர்வைமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அந்த போஸ்டரில், “அன்புள்ள ஹேப்பி, நீ என்றென்றும் எங்களில் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பாய். எங்கள் இதயங்களில் வாழ்வாய். சொர்கம் உன்னை அழைத்து கொண்டதுதான் எங்களின் இழப்பு .
எங்கள் அன்பான நாய் ஹேப்பியின் மறைவு பற்றிய சோகமான செய்தியை நாங்கள் கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். ஒரு செல்லப்பிராணியை விட, அது எங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாழ்ந்தது. ஒரு விசுவாசமான துணை, ஆறுதலின் ஆதாரம் மற்றும் நிபந்தனையற்ற அன்கின் அடையாளம்தான் ஹேப்பி. இது எங்கள் வாழ்க்கையில் கொண்டு வந்த மகிழ்ச்சியை ஒருபோதும் மறக்க முடியாது. விளையாட்டுத்தனமான தருணங்கள் முதல் உனது நினைவு என்றென்றும் எங்கள் இதயங்களில் வாழும். சுதந்திரமாக ஓடிய இனிய ஹேப்பி நீ எப்போதும் மிஸ் செய்யப்படுவாய். எப்போதும் நேசிக்கப்படுவாய் . ஒருபோதும் மறக்கப்பட மாட்டாய்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.