தேர்தலுக்கு முன்பே சாணக்கியத்தனமான அரசியல் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்த்தவர் மு.க.ஸ்டாலின் என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
சென்னையில் மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் செய்த சாணக்கியத்தனமான அரசியலால்தான் தமிழ்நாட்டில் அத்தனை தொகுதிகளை திமுக கூட்டணி வென்றது என்றும்,அதே சாணக்கியத்தனமான அரசியல் தான் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்ததும் என்றும் தெரிவித்தார்.
மேலும் மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்காத பிரதமருக்கு, திருச்சி சிவா எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.