மது குடிக்க பணம் தராத மாமியார்.. தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகன்..!
குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் என்பவரின் மனைவி சிவ பூஷணம் (65). இவர்களுக்கு கன்னியப்பன், குமார், சுரேஷ் ஆகிய மூன்று மகன்களும் சசிகலா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 10 வருடத்துக்கு முன்பு மகள் சசிகலா அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (46) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் ராமகிருஷ்ணனுக்கு திடிரென ஏற்பட்ட அதிகக் குடிப்பழக்கத்தால் கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அதனால் திருந்திவிடுவதாக கூறி தனது மாமியர் வீட்டிற்கு சென்று அங்கேயே வசித்து கொத்தனார் வேலை செய்து வந்தார். சில நாட்கள் அமைதியாக இருந்த அவர் மீண்டும் அதிக குடிப்பழக்கம் காரணத்தால் சரியாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இதனால் குடிக்க பணம் இல்லாத்தால் குடிக்க பணம் தருமாரு அடிக்கடி மாமியாரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று மீண்டும் குடிப்பதற்கு பணம் கேட்டு மாமியாரிடம் தகராறு செய்திருக்கிறார் ராமகிருஷ்ணன். பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் வீட்டின் அருகில் இந்த கல்லை எடுத்து மாமியாரின் தலையின் மீது போட்டுவிட்டு, அவர் காதில் அணிந்திருந்த இரண்டு கம்மல்களை அறுத்துக் கொண்டு ஓடி உள்ளார்.
சிவபூஷணத்தின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டு இருந்த அவரை மீட்டு தாம்பரம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று இரவு அவர் பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிவபூஷணத்தின் மகன் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து,தலைமறைவாகியிருந்த ராமகிருஷ்ணனை தேடி வந்தனர்.
அப்போது அவர் செங்கல்பட்டு மாவட்டம், திருமேனி பகுதியில் உள்ள நண்பர் மோகன் என்பவர் வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் படி கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மாமியார் சிவபூஷணம் தன்னை வீட்டில் சேர்க்காமலும் உணவு தராமல் தொந்தரவு செய்து வந்ததால் ஆத்திரத்தில் மது போதையில் இவ்வாறு செய்துவிட்டதாக ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்