வடிகால் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காததால், அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் மக்கள்..
கோபிசெட்டிபாளையம் அருகே வீடுகளில் வெள்ளம் புகுந்த நிலையில், பேரூராட்சி நிர்வாகம் வடிகால் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாழைகொம்பு புதூர் பகுதியில் பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
இதனால் வீடுகளில் சுமார் 3 அடி உயரம் வரை வெள்ளம் தேங்கி நின்றதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில், வடிகால் வசதியை ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூகலூர் – மேவாணி சாலையில் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் வருவாய்துறையினர் பொதுமக்களிடம் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தி வடிகால் வசதியை ஏற்படுத்தவும் வெள்ளம் வடிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் சாலை மறியலை கைவிட்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.